Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையம் சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் ரூபாய் 10.38 லட்சம் மதிப்பிலான காய்கறி,பாஸ்ட்புட் மற்றும் பூ விற்பனை செய்திட 13 விற்பனை வண்டிகள் வழங்கும் விழா நகராட்சி ஆணையர் சரவணன் தலைமையில் நடந்தது.
இதில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி மற்றும் அதற்கான உத்திரவு நகல் ஆகியவற்றை வழங்கினார்.
பொறியாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகரமைப்பு ஆய்வாளர் ஜான்சிராணி, கவுன்சிலர்கள் ஜேம்ஸ், அழகேசன், வேல்முருகன், ராஜ், தி.மு.க. நிர்வாகிகள் சரவணன், ஜுல்பிகார் அலி, கந்தசாமி, கதிரேசன், விக்னேஷ், ஐயப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.